தமிழகத்தில் மின்-அலுவலகம் திட்டத்தில் 2 லட்சம் அரசு கோப்புகள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுத் துறைகளில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மின்-அலுவலகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறுகையில், மின்-அலுவலகம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2 லட்சம் அரசு கோப்புகள் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இதுவரை 80 ஆயிரம் கோப்புகள் மின்னணுமயமாகியுள்ளன. தற்போது அனைத்து கோப்புகளும் மின்னணு வடிவிலேயே தயாரிக்கப்படுகின்றன. பழைய கோப்புகளை மின்னணு மயமாக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.