டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி அரசு மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்க துறையினர் கெஜ்ரிவாலை ஆஜர் படுத்தினர். இதில் கெஜ்ரிவாலை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கெஜ்ரிவாலை விசாரிக்க ஆறு நாள் காவலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.














