வடகொரியாவில் ஆங்கிலச் சொற்களுக்கு தடை

September 16, 2025

மேற்கத்திய தாக்கத்தைத் தவிர்க்கும் வகையில், வடகொரியா அரசு Hamburger, Ice cream போன்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. வடகொரியா, உலக நாடுகளிலிருந்து தனித்து நிற்கும் ஒரு சர்வாதிகார நாடு. இங்கு பல தசாப்தங்களாக ஒரே குடும்பத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது கிம் ஜாங் உன் நாட்டின் அதிபராக இருக்கிறார். அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையான கட்டுப்பாடுகளால் நிறைந்துள்ளது. இந்த நிலையில், வடகொரிய அரசு சில ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. […]

மேற்கத்திய தாக்கத்தைத் தவிர்க்கும் வகையில், வடகொரியா அரசு Hamburger, Ice cream போன்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

வடகொரியா, உலக நாடுகளிலிருந்து தனித்து நிற்கும் ஒரு சர்வாதிகார நாடு. இங்கு பல தசாப்தங்களாக ஒரே குடும்பத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது கிம் ஜாங் உன் நாட்டின் அதிபராக இருக்கிறார். அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையான கட்டுப்பாடுகளால் நிறைந்துள்ளது. இந்த நிலையில், வடகொரிய அரசு சில ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஹம்பர்கர், ஐஸ்கிரீம், கரோக்கி போன்ற சொற்கள் இனி பயன்பாட்டில் இருக்காது. இந்த நடவடிக்கை, மேற்கத்திய மற்றும் தென் கொரிய கலாச்சாரத்தின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அரசு அங்கீகரித்த சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என அந்நாடு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சுற்றுலா வழிகாட்டிகள் மூன்று மாத சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என அவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, வடகொரியாவின் தனித்துவமான கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 805

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu