வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கும் விதமாக, நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் அடிப்படையில், 9, 10, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெறும். மேலும் வரும் ஜனவரி 1, 2025 அன்று 18 வயதை எட்டியவர்கள், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து தேவையான படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தயார் செய்வதற்காக அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.