துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர். துருக்கியின் அரசியல் வழக்கபடி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான் அது பெரும்பான்மை. அதன்படி 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் 99% வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் எர்டோகன் 52% வாக்குகளும் அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இதையடுத்து துருக்கி தேர்தல் ஆணையம் எர்டோகன் வெற்றியை உறுதி செய்துள்ளது.