ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக சிவபிரசாந்த் தேர்வு

January 28, 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் போட்டியிடுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இது குறித்து டி.டி.வி. தினகரன் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடுகிறது.  ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.எம். சிவபிரசாந்த் அந்த பகுதியிலேயே வசிப்பவர். அவரது குடும்பத்தினரும் கட்சியின் சார்பில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். எனவே கட்சி அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றவில்லை. தி.மு.க.விற்கு தக்க பாடம் புகட்டும் […]

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் போட்டியிடுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து டி.டி.வி. தினகரன் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடுகிறது.  ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.எம். சிவபிரசாந்த் அந்த பகுதியிலேயே வசிப்பவர். அவரது குடும்பத்தினரும் கட்சியின் சார்பில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். எனவே கட்சி அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றவில்லை. தி.மு.க.விற்கு தக்க பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும் என்பது தான் கட்சியின் எண்ணம் என்று ௯றினார். இதற்காக கட்சி சார்பில் 294 பேர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு பிரசாரம் மேற்கொள்ளும் என்று ௯றினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu