எத்தியோப்பியாவில் 1329 பேர் பட்டினிச் சாவு

September 27, 2023

ஆப்பிரிக்காவை சேர்ந்த எத்தியோப்பியா நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. இந்த போர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக 1329 பேர் பட்டினியால் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டு சுகாதாரத்துறை மற்றும் மெக்கெல்லே பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில், பட்டினிச் சாவு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, வடக்கு எத்தியோப்பியாவின் டிகிரே பகுதியில் ஏற்படும் பல உயிரிழப்புகள் உணவு பற்றாக்குறை காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அகதிகள் முகாம்களில் கடந்த ஆகஸ்ட் 15 […]

ஆப்பிரிக்காவை சேர்ந்த எத்தியோப்பியா நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. இந்த போர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக 1329 பேர் பட்டினியால் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எத்தியோப்பியா நாட்டு சுகாதாரத்துறை மற்றும் மெக்கெல்லே பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில், பட்டினிச் சாவு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, வடக்கு எத்தியோப்பியாவின் டிகிரே பகுதியில் ஏற்படும் பல உயிரிழப்புகள் உணவு பற்றாக்குறை காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அகதிகள் முகாம்களில் கடந்த ஆகஸ்ட் 15 முதல் 29 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, உள்நாட்டுப் போரில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எத்தியோப்பியாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu