பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா கோரிக்கை

July 1, 2023

நாட்டு நலனை கருத்தில் கொண்டு பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு செய்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். இதில் தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை வகித்து வருகிறது. இந்நிலையில் பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்காக ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை விடுத்துள்ளது. எத்தியோப்பியா ஏற்கனவே ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம் போன்ற […]

நாட்டு நலனை கருத்தில் கொண்டு பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு செய்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். இதில் தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை வகித்து வருகிறது. இந்நிலையில் பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்காக ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை விடுத்துள்ளது. எத்தியோப்பியா ஏற்கனவே ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம் போன்ற பல பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. எனினும் நிலவும் சர்வதேச சூழ்நிலை காரணமாக நாட்டு நலனை பாதுகாப்பதற்காக பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு எடுத்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மெல்ஸ் அலெம் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu