யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா அணி முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது.
ஜெர்மனியில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான இந்த போட்டியில் பரிசு தொகை ரூபாய் 3000 கோடி ஆகும். இதில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி 24 அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் நான்கு அணிகள் என ஆறு பிரிவுகள் பிரித்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. குரூப் இ பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவேகியா அணி மோதியது. இதில் ஸ்லோவேகியா அணி 56 நிமிடத்தில் ஒரு கோல் எடுத்தது எவ்வளவு முயன்றும் பெல்ஜியம் அணியால் கோல்கள் அடிக்க இயலவில்லை. எனவே 1-0 என்ற அடிப்படையில் ஸ்லோவேகியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் வெற்றியின் குரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா அணி முதலிடம் இருந்து அசத்தியுள்ளது