நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வான நீட் கடந்த மே ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கான மறுத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வினை 1563 பேரில் 813 பேர் மட்டுமே எழுதினர். மேலும் இது 6 நகரங்களில் வெவ்வேறு மையங்களில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது














