போக்குவரத்து கழகங்களில் காலியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் - தமிழக அரசு உத்தரவு

February 16, 2023

போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுனர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு […]

போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுனர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.சி. ஓபிசி, எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பு சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu