சென்னை-திருச்சி 8 வழிச்சாலை பசுமை அதிவிரைவு சாலையாக விரிவாக்கம்

November 6, 2024

பாரத்மாலா திட்டத்தின் கீழ், சென்னை-திருச்சி நெடுஞ்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று சென்னை-திருச்சி நெடுஞ்சாலை ஆகும். . இந்த சாலை மூலமாக பயணிகள் மற்றும் பொருளாதார சேவை ஆகியவற்றின் தாமதங்களை குறைக்க, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கவும், தற்போது உள்ள நான்குவழி சாலையை பசுமை வழி அதிவிரைவு சாலையாக மாற்றுவதற்கான திட்டம் ‘நகாய்’ எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒன்றிணைந்து செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டம், சென்னை-திருச்சி சாலையின் 8 வழிச்சாலையாக மாற்றப்படுவதோடு, பாரத்மாலா […]

பாரத்மாலா திட்டத்தின் கீழ், சென்னை-திருச்சி நெடுஞ்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படுகிறது.

தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று சென்னை-திருச்சி நெடுஞ்சாலை ஆகும். .
இந்த சாலை மூலமாக பயணிகள் மற்றும் பொருளாதார சேவை ஆகியவற்றின் தாமதங்களை குறைக்க, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கவும், தற்போது உள்ள நான்குவழி சாலையை பசுமை வழி அதிவிரைவு சாலையாக மாற்றுவதற்கான திட்டம் ‘நகாய்’ எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒன்றிணைந்து செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டம், சென்னை-திருச்சி சாலையின் 8 வழிச்சாலையாக மாற்றப்படுவதோடு, பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையுடன் இணைக்கப்பட்டு விரிவாக்கப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க திட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து தொடங்குகின்றது. ரூ.26,500 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. திட்டத்தின் முதற்கட்ட பணிகளாக, முக்கிய இடங்களின் விவரங்களை சேகரித்தல் மற்றும் மேம்பாலங்கள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெறுகின்றன.இந்த 8 வழிச்சாலை, மாநிலத்தில் உள்ள 3 முக்கிய நகரங்களுடன், 3 தொழில்சாலை நகரங்களையும் இணைக்கும் என முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய ஒரு ஊக்குவிப்பாக அமையும். இதன் மூலம், சென்னையை முதல், திருச்சி வரை பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu