மத்திய அரசு, புழுங்கல் அரிசி, பட்டை தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரியை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இந்த பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம், பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலையும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அரிசியின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.