தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தக்காளி ஏற்றுமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம்,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நல்ல நிலையில் இருந்த விளைச்சல் தற்போது வெயில் காரணமாக தக்காளி பயிர்கள் வாடி பழங்கள் உருவாகாமல் பிஞ்சிலேயே உதிர்கின்றன. இதனால் தக்காளி விளைச்சல் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரிய மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கிலோ 40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தமிழக பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆந்திர எல்லையில் உள்ள வேலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தக்காளி விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது