கொரோனா அதிகரிப்பால் மதுரை உயர்நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சுகாதாரத்துறையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மதுரை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. கொரோனா அதிகரிப்பால் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் முக்கவசம் கட்டாயம் அமலுக்கு வந்தது. நீதிமன்ற பணியாளர்கள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.