டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் பேரணி நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக அரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து டிராக்டர்கள் மூலம் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் டெல்லி நோக்கி செல்வதை போலீசார் தடுத்தனர். இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்பிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டியடித்தனர். கடந்த புதன் அன்று 21 வயது விவசாயி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு போலீசார் தான் காரணம் என்றும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறினர். இந்நிலையில், வருகிற 29ஆம் தேதி வரை டெல்லி சலோ பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதே வேளையில் பஞ்சாப் அரியானா எல்லைகளான ஷம்பு மற்றும் கனாரி ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்போம் என்று கூறியுள்ளனர். மரணம் அடைந்த 21 வயதான சுப்கரண் சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி வகையில் இன்று நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.