மத்திய அரசு குடியரசு விழாவில் பங்கேற்க 10 ஆயிரம் விருந்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு பல்வேறு விழாக்களில் பொதுமக்களை சிறப்பு விருந்தினராக அழைக்கின்றது. இதில், 26-ந் தேதி டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் 10 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். கிராம பிரதிநிதிகள், பேரிடர் நிவாரண பணியாளர்கள், வனபாதுகாவலர்கள், கைவினைஞர்கள், சமூகநல ஆர்வலர்கள், பாரா ஒலிம்பிக் வீரர்கள் உள்ளிட்ட 31 பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவோ, தேசிய போர் நினைவிடம், பிரதமர் சங்கராலயா போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவோ உள்ளனர். இந்த ஆண்டில், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ முக்கிய விருந்தினராக பங்கேற்கிறார்.