ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 31-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர், அமமுக கட்சி வேட்பாளர்கள் உட்பட இதுவரை 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கவுள்ளது. வரும் 10-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கவுள்ளது.