பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கும் என ஜனாதிபதி அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 27ஆம் தேதி கடைசி நாளாகும். மனு பரிசீலனை 28ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.