மத்திய நிதியமைச்சகம் அலுவலக மின்னணு சாதனங்களில் ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அரசு ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத் தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், சாட் ஜிபிடி, டீப் சீக் போன்ற ஏ.ஐ. கருவிகளை தவிர்க்குமாறு ஜன. 29 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓப்பன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் இன்று (பிப். 5) இந்தியா வருகை தருகிறார். அவர் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே சமயத்தில், ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் தரவுப் பாதுகாப்புக்காக டீப் சீக் செயலுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.