பாகிஸ்தான் ராணுவத்தில் முதல் முறையாக சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண் பிரிக்கேடியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் ஹெலன் மேரி என்ற கிறிஸ்தவ பெண் பிரிக்கேடியராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 26 ஆண்டுகளாக, பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராக அவர் பணியாற்றி வந்துள்ளார். பாகிஸ்தானை பொறுத்தவரை சிறுபான்மை மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரிக்கேடியர் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அவருக்கு பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய சாதனை பாகிஸ்தானிய பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என கூறியுள்ளார். பாகிஸ்தான் பெண்களுக்கு இது பெருமைமிகு தருணம் என கூறியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்ளும் தருணம் இது என்று கூறியுள்ளார்.