மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முதல் கட்டமாக வெளியேற்றம்

February 27, 2024

மாலத்தீவில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மாலத்தீவில் புதிய அதிபராக முகமது மொய்சு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் இந்தியாவிற்கு எதிரான பல்வேறு நிலைபாட்டை எடுத்து வருகிறார். இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வந்தார். மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்ட உள்ளனர். இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் மாலத்தீவில் இந்திய […]

மாலத்தீவில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

மாலத்தீவில் புதிய அதிபராக முகமது மொய்சு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் இந்தியாவிற்கு எதிரான பல்வேறு நிலைபாட்டை எடுத்து வருகிறார். இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வந்தார். மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்ட உள்ளனர். இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டது. இதனை அடுத்து மார்ச் பத்தாம் தேதிக்குள் ஒரு விமானப் படைத்தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் முதல் கட்டமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu