அசாம் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நகரையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வாரத்தின் 6 நாட்கள் இயங்கும். அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும்.
கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். மேலும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட 182 கிமீ ரயில் பாதையையும், அசாமில் உள்ள லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஇஎம்யு/எம்இஎம்யு பணிமனைகளை பிரதமர் திறந்து வைக்கிறார்.