சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு டெல்லி, மும்பை,பெங்களூர்,கோவா, கோவை, அபுதாபி, புனே, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பத்து விமானங்கள் தரையிறங்க முடியாமல் இருந்தன. வானிலை சற்று சீரானதும் இவை ஒன்றன்பின் ஒன்றாக தரையிரங்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, அபுதாபி, ஹைதராபாத் உட்பட்ட ஆறு விமானங்கள் வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றது.