பிரேசிலின் சாண்டா கேடரினாவில் பெய்த கனமழையால் கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பிரேசிலில் சாண்டா கேடரினா மாகாணத்தில் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இதனால் மக்கள் தங்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 880 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுவரை இந்த நிலையில், அங்கு 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.