முதல்முறையாக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு

August 26, 2022

முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெற உள்ளார். இந்நிலையில், அவரது தலைமையில் நடக்கும் அனைத்து வழக்கின் விசாரணைகளும், தீர்ப்புகளும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டுகால வரலாற்றில் வழக்கு விசாரணை நேரலை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். காலை 10.30 மணிக்கு தொடங்கிய நேரலை, மாலை வரை ஒளிபரப்பப்பட இருக்கிறது. இன்று நேரலையில் மொத்தம் 20 வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. […]

முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெற உள்ளார். இந்நிலையில், அவரது தலைமையில் நடக்கும் அனைத்து வழக்கின் விசாரணைகளும், தீர்ப்புகளும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டுகால வரலாற்றில் வழக்கு விசாரணை நேரலை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய நேரலை, மாலை வரை ஒளிபரப்பப்பட இருக்கிறது. இன்று நேரலையில் மொத்தம் 20 வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. நேஷனல் இன்பேர்மேட்டிக் சென்டர் எனப்படும் தேசிய தகவல் மையத்தின் இணையதளம் மூலம் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று வேகமாக பரவிய காலகட்டத்தில், வழக்குகள் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டன. ஆனால் அவைகள் நேரலை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2015ம் ஆண்டு ஹெல்மெட் கட்டாயத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டது உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் நேரலையாகும். அதோடு, கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை முதல்முறையாக காணொலியில் நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu