'ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்கள்' ஃபோர்ப்ஸ் பட்டியலில், 3 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர்

November 9, 2022

'ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்கள்' பட்டியலை, நேற்று ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், வணிகத்துறையைச் சேர்ந்த, ஆசியாவின் 20 பெண்கள் மொத்தமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் மூவர், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் காலத்திலும், தங்களது வணிகத்தை முன்னேற்ற பாதையில் இட்டுச் சென்றதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக, மாமா எர்த் (mamaearth) நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹோனாசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் துணைவேந்தரான கசல் அலக் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரது நிறுவனம், […]

'ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்கள்' பட்டியலை, நேற்று ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், வணிகத்துறையைச் சேர்ந்த, ஆசியாவின் 20 பெண்கள் மொத்தமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் மூவர், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் காலத்திலும், தங்களது வணிகத்தை முன்னேற்ற பாதையில் இட்டுச் சென்றதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக, மாமா எர்த் (mamaearth) நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹோனாசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் துணைவேந்தரான கசல் அலக் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரது நிறுவனம், ஜனவரி மாதம் யூனிகார்ன் பட்டியலில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனத்தின் தலைமை அதிகாரி சோமா முந்தாள் இடம் பிடித்துள்ளார். இவரது தலைமையில், நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் 50% உயர்ந்துள்ளது. மூன்றாவதாக, எம்கியூர் பார்மா (Emcure Pharma) நிறுவனத்தின் செயல் இயக்குனர் நமீதா தப்பார் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu