கட்டாய மத மாற்றம் சட்டவிரோதம் : உச்ச நீதிமன்றம்

December 6, 2022

கட்டாய மத மாற்றம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், கட்டாய மத மாற்றத்தை தடுப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. துாண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்தல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]

கட்டாய மத மாற்றம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், கட்டாய மத மாற்றத்தை தடுப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. துாண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்தல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய மத்திய அரசின் சார்பில் 'மாநிலங்களிடம் இருந்து தகவல்கள் சேகரித்து வருகிறோம். மேலும் அவகாசம் வேண்டும்' என கூறியுள்ளது. இதையடுத்து நீதிபதிகள், 'கட்டாய மத மாற்றம் என்பது மிகவும் தீவிரமான பிரச்னை. மேலும் இது நம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என குறிப்பிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu