அரபிக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்க பட்டுள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் உருவாகிறது. இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.