இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த அவர், வீடு திரும்பிய பிறகு உயிரிழந்தார்.
1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பதவி வகித்த அவர், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசிய கல்விக் கொள்கை குழுத் தலைவராகவும் பணியாற்றினார். அவரது பணி சிறப்புக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.அவரது உடல் ராமன் ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.