அமெரிக்காவில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம்

July 15, 2024

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவருக்கு காதில் காயம் ஏற்பட்டது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் இந்த இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் பட்லர் நகரில் […]

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவருக்கு காதில் காயம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் இந்த இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் பங்கேற்றார். அப்போது அவர் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவருடைய காதில் குண்டு பாய்ந்து ரத்த காயம் ஏற்பட்டது. அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அதே சமயம் இந்த தாக்குதலில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் பலியாகினார். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பாதுகாத்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்திய நபரை உளவுப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அவர் 20 வயதான தாமஸ் மேத்யூ என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சிகிச்சைக்கு பின் ட்ரம்ப் நலமாக உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu