பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது.
பார்னியர் தனது அமைச்சரவைக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், அதிகாரத்தில் நீடிக்க தீவிர வலதுசாரி தேசிய பேரணியின் ஆதரவை நம்பியுள்ளார். புதிய பாப்புலர் ஃப்ரண்டின் 192 இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற 289 வாக்குகள் தேவை. எவ்வாறாயினும், 125 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பேரணி, பார்னியரின் அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்து வாக்களிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இடதுசாரி குழுக்கள் பார்னியரின் நியமனத்தை விமர்சிக்கின்றன. அவர்கள் அதிக இடங்களை வென்ற போதிலும் சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்பட்டது என்று வாதிடுகின்றனர். இது பாராளுமன்றத்தில் நிலவும் அரசியல் சிக்கல்களை மேலும் ஆழமாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.