பயங்கரவாதம் இரு நாடுகளுக்கும் பொது எதிரி என இஸ்ரேலில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பிரெஞ்சு அதிபர் கூறுகையில், பிரான்சுக்கும் இஸ்ரேலுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இந்த போராட்டத்தில் இஸ்ரேல் தனியாக இல்லை. ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்தது போல் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும். இந்த போரில் பிரான்சும் ஒன்றிணையும். பாலஸ்தீன பிரச்சனைக்கு இஸ்ரேல் அரசியல் ரீதியாக தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்கு பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.