நேற்று முதல் பாராளுமன்ற தேர்தலுக்காக சென்னை காவல்துறையில் பணிபுரியும் 19000 போலீசார் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 19000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் இவர்கள் நேரடியாக வாக்கு பதிவு மையங்களுக்கு சென்று ஓட்டு போட முடியாத காரணத்தினால் தபால் ஓட்டுகளை போட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று முதல் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள 19000 போலீசாரம் மூன்று நாட்களுக்கு தபால் ஓட்டுகள் போடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதிகளில் தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முதல் 13ஆம் தேதி வரையில் போலீசார் தபால் ஓட்டுகளை போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.