ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா - ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார்

September 8, 2023

டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டு அதிபர் பெட்ரோ சான்சஸ் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜி 20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்த மாநாடு நாளையும், நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அந்த வகையில், ஸ்பெயின் நாட்டு அதிபர் பெட்ரோ சான்சஸ் இந்தியாவிற்கு வர இருந்தார். இந்நிலையில் அவருக்கு […]

டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டு அதிபர் பெட்ரோ சான்சஸ் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜி 20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்த மாநாடு நாளையும், நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அந்த வகையில், ஸ்பெயின் நாட்டு அதிபர் பெட்ரோ சான்சஸ் இந்தியாவிற்கு வர இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோ சான்சஸ் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஸ்பெயின் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக துணை அதிபர் நடியா கேல்வினோ, பொருளாதார மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின் பிங் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu