உத்திர பிரதேசத்தில் தங்கத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு

August 25, 2022

உத்தரபிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக தங்கத்தாலான விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் வரும் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உத்தரப்பிரதேசத்திலுள்ள சந்தாயூசி என்ற இடத்தில் தங்கத்திலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைக்கு ஸ்வர்ண கணேஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிலையில் 40 முதல் 50 சதவிகிதம் வரை தங்கம் பயன்படுத்தப்படும் என்றும் அத்துடன் பிற உலோகங்கள் பயன்படுத்தி இந்த விநாயகர் சிலை செய்யப்பட்டு வருவதாக சிலை […]

உத்தரபிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக தங்கத்தாலான விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் வரும் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உத்தரப்பிரதேசத்திலுள்ள சந்தாயூசி என்ற இடத்தில் தங்கத்திலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைக்கு ஸ்வர்ண கணேஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிலையில் 40 முதல் 50 சதவிகிதம் வரை தங்கம் பயன்படுத்தப்படும் என்றும் அத்துடன் பிற உலோகங்கள் பயன்படுத்தி இந்த விநாயகர் சிலை செய்யப்பட்டு வருவதாக சிலை தயாரிப்பு கலைஞர்கள் கூறுகின்றனர். இந்த சிலை 18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தங்க உலோக சிலையை பாதுகாப்பாக கரைக்கவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இதையடுத்து, மும்பையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட உள்ளனர். அதற்காக வித விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் சிலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிலைகளின் விலையும் அதிகமாக இருக்கும் என்று சிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu