எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசா இருளில் மூழ்கியது

October 12, 2023

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காசா இருளில் மூழ்கியது.காசாவில் கடந்த ஐந்து நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐநா ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ஸ் ஆலோசனை நடத்தினர். இஸ்ரேல் போர் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளதால் ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூறப்படுகிறது. காசாவில் எரிபொருள் […]

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காசா இருளில் மூழ்கியது.காசாவில் கடந்த ஐந்து நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐநா ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ஸ் ஆலோசனை நடத்தினர். இஸ்ரேல் போர் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளதால் ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூறப்படுகிறது. காசாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிலையம் முடங்கியது. இதனால் காசா இருளில் மூழ்கியது.
ஏற்கனவே உணவு, எரிபொருள், மின்சாரம், தண்ணீர் என அனைத்தையும் காசாவுக்கு கொண்டு செல்ல இஸ்ரேல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என தகவல் வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu