வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசா தடை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கு ஜேர்மனியும் பிரான்சும், சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
ப்ராக் நகரில் நடைபெறும் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசாக்கள் தடை செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கிழக்கு மற்றும் நோர்டிக் உறுப்பு நாடுகள், விசாதடைக்கு வலுவாக வாதிட்டன. அப்போது பிரான்சும் ஜெர்மனியும் ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்பில்லாத ரஷ்ய நாட்டினருடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் மக்கள் தொடர்பு கொள்ள தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று ௯றின. அதற்கு ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி,
ரஷ்யர்களுக்கான விசா தடைசெய்யப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியங்களுக்குள் க௫த்து வேறுபாடு ஏற்படும். ஆகவே ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசாவிற்கு 35 யூரோக்களுக்கு பதில் 80 யூரோக்கள் உயர்த்த வேண்டும் என்று ௯றினார். மேலும் ரஷ்யர்கள் பெரும்பாலும் எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகள் வழியாகவே ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைகிறார்கள். ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் யூனியன் அளவில் விசா தடைக்கு உடன்படவில்லையெனில், இந்த நாடுகள் தாங்களாகவே செயல்படலாம் என்று கூறினார்.