தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா முன்னிட்டு, தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது வழக்கமாகிறது. கடந்த பொங்கலில் (2024) பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இதனைப் போல, 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு சுருங்கிய பரிசு தொகுப்பின் அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பொங்கல் பரிசு தொகுப்பை 5 நாட்களுக்கு முன்பாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, முதலமைச்சர் அறிவிப்பை வழங்குவார் என்று தெரிவித்தார்.