சர்வதேச முதலீட்டு மற்றும் வங்கிசார் நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பாதிப்படைய உள்ளனர் என்று கூறப்படுகிறது. மூன்றாம் காலாண்டு இறுதியில், கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 49,000 பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை 45000 வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தில், சுமார் 3200 பணியாளர்கள் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வர்த்தகம் மற்றும் வங்கி நிறுவனப் பிரிவுகளில் பணி நீக்கம் செய்யப்படும் என கருதப்படுகிறது. சர்வதேச அளவில் நிதித் துறையில் நிலையற்ற தன்மை நிலவுவதால் இந்த பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் டேவிட் சாலமன் ஏற்கனவே ஆட்குறைப்பு குறித்த எச்சரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.