தேடுபொறி துறையில் சட்டவிரோத ஆதிக்கத்தை செலுத்தியது கூகுள் - அமெரிக்க நீதிமன்றம்

August 6, 2024

உலகளாவிய தேடுபொறி சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. நீதிபதி மேத்தா தனது தீர்ப்பில், கூகுள் நிறுவனம் ஆன்லைன் தேடல் சந்தையில் 90% மற்றும் ஸ்மார்ட்போன் தேடல் சந்தையில் 95% பங்கைக் கட்டுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல கோடி டாலர்களை செலவிட்டு சட்டங்களை மீறியதாகவும் […]

உலகளாவிய தேடுபொறி சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.
நீதிபதி மேத்தா தனது தீர்ப்பில், கூகுள் நிறுவனம் ஆன்லைன் தேடல் சந்தையில் 90% மற்றும் ஸ்மார்ட்போன் தேடல் சந்தையில் 95% பங்கைக் கட்டுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல கோடி டாலர்களை செலவிட்டு சட்டங்களை மீறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்கு விலை 4.5% சரிந்துள்ளது. கூகுள் நிறுவனம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை அமைச்சர் மெரிக் கார்லண்ட் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu