ஆப்பிள் நிறுவனத்தை போலவே கூகுள் நிறுவனமும் தனது கைபேசியை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, கூகுள் நிறுவனத்தின் கைபேசியை தயாரிக்கும் தொழிற்சாலை, தமிழகத்தில் அமைக்கப்படுவதாக வெளிவந்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கூகுள் அதிகாரிகள் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, தனது அமெரிக்க பயணத்தின் போது, பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து கூகுள் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பயனாக, பாக்ஸ்கான் உடன் இணைந்து கூகுள் நிறுவனத்தின் கைபேசி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் பிரகாசமான சூழல் ஏற்பட்டுள்ளது.