அக்டோபர் 31-ந்தேதி தீபாவளியை தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் 31-ந்தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் சங்கம் நவம்பர் 1 ஆம் தேதியையும் விடுமுறை நாளாக அறிவிக்கும் படி கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்காக நவம்பர் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய 9-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.