உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரியை அரசாங்கம் குறைத்து அறிவித்துள்ளது. அத்துடன், டீசல் ஏற்றுமதிக்கான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 5000 ரூபாய் வரி விதிக்கப்பட்டிருந்தது. இது தற்போது 1300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதி செய்யப்படும் டீசலுக்கான விண்டுபால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாயிலிருந்து 50 பைசாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், விமானங்களுக்கான எரிபொருள் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு 1 ரூபாய் விண்டுபால் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விண்டுபால் வரி விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மீதான விண்டுபால் வரியில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.