குருப் 4 தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்டது. காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 7689 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வு சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.
இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் குருப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 9,870 ஆக அதிகரித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஜனவரியில் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.