விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜிஎஸ்பி மண்டல் விநாயகர் சிலை ரூபாய் 360 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இதில் பல்வேறு இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜை செய்து நீர்நிலையங்களில் கரைக்கப்படும். இதில் முக்கியமாக லால் பாக் ராஜா, கணேஷ் கல்லி, வடலா ஜிஎஸ்பி மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும். இவற்றை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள். இங்கு ஆண்டு தோறும் பெரிய மண்டல்கள், தங்கள் மண்டல்களை காப்பீடு செய்வது வழக்கம். அதேபோல் நடப்பு ஆண்டிலும் பணக்கார விநாயகர் என கருதப்படும் வடாலா ஜி எஸ் பி மண்டல சிலைக்கு ரூபாய் 360 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஜி எஸ் பி விநாயகர் சிலையானது 66 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்படும். இது கடந்த ஆண்டு ரூபாய் 316 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் விநாயகருக்கு அணிவிக்கும் நகைகளுக்கு மட்டும் ரூபாய் 38.47 கோடிகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மண்டல் ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு ரூபாய் 289.50 கோடி அளவு விபத்து காப்பீடு, தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஒரு தொகை என காப்பீடும் செய்யப்பட உள்ளது.