குஜராத் மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு - 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது

November 3, 2022

குஜராத் மாநில தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 51782 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 50% வாக்குச்சாவடிகளில் […]

குஜராத் மாநில தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 51782 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 50% வாக்குச்சாவடிகளில் இணையம் வாயிலாக வாக்களிக்கும் வசதி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற இருக்கும் இந்த தேர்தலில், முதல் முறையாக வாக்களிப்போரின் எண்ணிக்கை 324422 ஆக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய திரு. ராஜீவ் குமார், “புதுமையான வாக்களிக்கும் அனுபவத்திற்காக, சுமார் 1274 வாக்குச்சாவடிகள் முழுமையாக பெண்களைக் கொண்டு இயக்கப்பட உள்ளன. சுமார் 180 வாக்குச்சாவடிகளில் பொதுப்பணி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். மேலும், நாட்டிலேயே முதல் முறையாக சுமார் 33 வாக்குச்சாவடிகள் இளம் அதிகாரிகளால் கட்டமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட உள்ளன” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu