குஜராத் தொங்குபால விபத்து - குற்றப்பத்திரிகை தாக்கல்

January 28, 2023

குஜராத் மோர்பியில் உள்ள பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்தனர். மேலும் பாலத்தை பராமரித்து வந்த ஒரேவா குழுமத்தை சேர்ந்த ஜெய்சுக் படேல் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந் நிலையில் பால விபத்து தொடர்பாக போலீசார் மோர்பி செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1,200 பக்கங்களுக்கு மேல் கொண்ட […]

குஜராத் மோர்பியில் உள்ள பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்தனர். மேலும் பாலத்தை பராமரித்து வந்த ஒரேவா குழுமத்தை சேர்ந்த ஜெய்சுக் படேல் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந் நிலையில் பால விபத்து தொடர்பாக போலீசார் மோர்பி செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1,200 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் சிறையில் இருக்கும் 9 பேர் மற்றும் ஜெய்சுக் படேல் என 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதற்கிடையில் ஜெய்சுக் படேல் மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது முன்ஜாமீன் மனு வருகிற 1-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu