பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் இன்று அதிகாலை 9 இடங்களில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது. இதில் 3 முக்கிய தீவிரவாத அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியா–பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான அலுவல்களில் மட்டுமே இவர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வருகிற 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து செல்லவிருந்த பயணங்கள், தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.