பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் எச்.டி ரோவண்ணா மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் வழக்கில் தேடபட்டு வரும் பிராஜ்வால் ரோவண்ணாவின், வீடியோவில் இருந்த பெண்ணை கடத்தியதாக எச். டி. ரோவண்ணா மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து ரோவண்ணாவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ரோவண்ணா ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதாடினார். அதனை தொடர்ந்து ரோவண்ணா வை மே 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணையை பெங்களூர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது